மாணவர்களின் ஸ்கூல் பாக்கில்  கிடந்த பொருட்களால் அதிர்ச்சி

மாணவர்களின் ஸ்கூல் பாக்கில் கிடந்த பொருட்களால் அதிர்ச்சி

  • local
  • September 22, 2023
  • No Comment
  • 71

பாடசாலை மாணவர்களின் புத்தகபைகளில் சந்தேகத்திற்கிடமான சில பொருட்களுடன் சில இன்ஹேலர்கள் காணப்பட்டதாக கொகரெல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் புத்தக பைகளில் இவை கிடைத்ததை அடுத்து, அவற்றை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவரை கொகரெல்ல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆசிரியர் பரிசோதனை

இவர் கொகரெல்ல பகுதியில் கையடக்க தொலைபேசி மற்றும் பாகங்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார். 

கொகரெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அதே தரத்தில் கல்வி கற்கும் சில மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதித்த வகுப்பு ஆசிரியர் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத் மேற்பார்வையின் கீழ், குருநாகல் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் பணிப்புரையின் பேரில்,காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் விஜேரத்ன, பிரதான காவல்துறை குழுவொன்று சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply