இங்கிலாந்துக்கான விசா கட்டணம் 15% ஆல் உயர்வு

இங்கிலாந்துக்கான விசா கட்டணம் 15% ஆல் உயர்வு

  • world
  • October 6, 2023
  • No Comment
  • 65

இங்கிலாந்து செல்வோருக்கான விசா கட்டணங்களை அந்நாட்டு அரசு 15 முதல் 20% வரை அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் மாணவர்கள் கூடுதலாக 13 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

உலகின் மிகவும் வளமிக்க நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து கல்வி பயில்வதற்காகவும், மருத்துவம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதற்காகவும் ஏராளமானோர் இங்கிலாந்து நாட்டின் விசா கோரி ஆண்டுதோறும் விண்ணப்பித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்ற பின்னர், விசா கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பது என முடிவு செய்தார்.

இதன் மூலமாக இங்கிலாந்து நாட்டின் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த கூடுதல் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது.

6 மாதத்திற்கும் குறைவாக இங்கிலாந்தில் இருக்க விரும்புவோர் 115 பவுண்டுகள் விசா கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்.

வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் மாணவர்கள் ஏற்கெனவே இருந்த 363 பவுண்டுகளுக்கு பதிலாக 490 பவுண்டுகள் விசா கட்டணமாக செலுத்த வேண்டும். இது 127 பவுண்டுகள் அதிகமாகும்.இந்திய மதிப்பில் இது சுமார் 13 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று வேலைக்காக செல்வோர் மற்றும் இங்கிலாந்திலேயே குடியிருக்க விரும்புவோர் செலுத்த வேண்டிய கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply