தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • local
  • August 16, 2023
  • No Comment
  • 61

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 313.99 ரூபாவிலிருந்து 314.72 ரூபாவாகவும் விற்பனை விலை 326.88 ரூபாவிலிருந்து 328.02 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

வர்த்தக வங்கிகளில் ரூபாவின் பெறுமதி
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (15.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை முறையே 312.88 மற்றும் 3328.27 ரூபாவாக அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 311.74 ரூபாவாகவும் விற்பனை விலை 326 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 315 மற்றும் 327 ரூபாவாக மாறாமல் உள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply