ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில்  தொடரும் குளறுபடி நிலை தொடர்பில் விசாரணை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் தொடரும் குளறுபடி நிலை தொடர்பில் விசாரணை

  • local
  • October 2, 2023
  • No Comment
  • 39

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் சில விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் ஆராய விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இன்று (02.10.2023) காலை 9.30 மணிக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பல ஸ்ரீலங்கன் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன் விமான சேவை நேர அட்டவணைகளில் தாமதங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளிடம் விசாரணை
இந்நிலையில், விமான சேவைகளின் தாமதங்கள், நாட்டின் தேசிய விமான சேவைக்கு களங்கம் ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அண்மைய நாட்களில் சில விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது. அத்துடன் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கி வரும் அசௌகரியங்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply