இந்தியாவின் சந்திரயானை விட இலங்கையின் சுப்ரீம்சாட்டிற்கு அதிக செலவு! விளக்கம் கோரிய சஜித்

இந்தியாவின் சந்திரயானை விட இலங்கையின் சுப்ரீம்சாட்டிற்கு அதிக செலவு! விளக்கம் கோரிய சஜித்

  • world
  • August 25, 2023
  • No Comment
  • 73

சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு இந்தியா 263 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே செலவிட்டுள்ள போதும் 2012ஆம் ஆண்டு சுப்ரீம்சாட் ஏவுவதற்கு இலங்கை 320 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சந்திராயனுக்காக செலவிடப்பட்ட பணம்
2008, 2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் சந்திரயான் 1, சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 ஆகிய மூன்று முயற்சிகளுக்கும் 263 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுப்ரீம்சாட் திட்டத்திற்கான பாரிய செலவீனம் மற்றும் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.சுசில் பிரேமஜயந்த வழங்கியுள்ள பதில்
இலங்கையில் செயற்கைக்கோள் ஏவப்பட்டதன் பின்னர், சந்திரனில் தரையிறங்குவதற்குப் பதிலாக இலங்கை ஒரு நாடாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார் .

இதேவேளை 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சராக தான் இருந்ததாகவும், இலங்கையில் இவ்வாறான செயற்கைக்கோள் ஏவப்படுவது குறித்து தனக்கு தெரியாது என்றும் சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply