கதறும் புகலிடக்கோரிக்கையாளர்கள்! பிரித்தானிய எம்.பியின் கருத்தால் வெடித்தது சர்ச்சை

கதறும் புகலிடக்கோரிக்கையாளர்கள்! பிரித்தானிய எம்.பியின் கருத்தால் வெடித்தது சர்ச்சை

  • world
  • August 10, 2023
  • No Comment
  • 47

பிரித்தானியாவில் மிதக்கும் குடியிருப்புக்கு செல்ல மறுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் கதறாமல் பிரான்சிற்கே சென்று விடுங்கள் என கன்சர்வேடிவ் கட்சி துணைத் தலைவரான லீ ஆண்டர்சன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் தாம் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக்கேட்க போவதில்லை எனவும், அது தமது ஆதங்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கன்சர்வேடிவ் கட்சி துணைத்தலைவர் மேலும் தெரிவிக்கையில்,சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்
Dorset பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள மிதக்கும் குடியிருப்பில், புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கம் இவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து, உரிய முடிவை அறிவிக்கும் வரையில், 3 முதல் 9 மாதங்கள் வரையில் தங்க வைக்கவுள்ளது. இந்நிலையில், அரசாங்கம் சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது.ஒவ்வொரு முறையும் படகுகள் மூலமாக மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதும், அவர்களை ஹொட்டல்கள் மற்றும் மிதக்கும் குடியிருப்புகளில் தங்க வைப்பதும் உண்மையில் கோபத்தை ஏற்படுத்துகின்றது.

பிரான்சில் அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பது கண்கூடாக பார்த்தவன். இதனால் தான், பிரித்தானியா அளிக்கும் வசதிகளை ஏற்க மறுப்பவர்கள், பிரான்சிற்கே சென்றுவிட வேண்டும் என்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply