கொழும்பில் பொலிஸாரை கடுமையாக தாக்கிய பாடசாலை மாணவர்கள்

கொழும்பில் பொலிஸாரை கடுமையாக தாக்கிய பாடசாலை மாணவர்கள்

  • local
  • September 25, 2023
  • No Comment
  • 53

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் 2 பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய 5 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் பாறைகளுடன் கூடிய இடங்களில் குடிபோதையில் சிலர் பாதுகாப்பின்றி நீராடுவதாக கல்கிஸ்ஸ பொலிஸார் கடலோர காவல்படை பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

பொலிஸார் மீது தாக்குதல்

குறித்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சோதனையின் போது, நீராடுவதற்கு தகுதியற்ற வகையில் பாதுகாப்பற்ற இடத்தில் 06 பேர் அவதானிக்கப்பட்டனர்.

பின்னர், அந்த இடத்தில் குளிப்பது பாதுகாப்பற்றது என்று கூறியதையடுத்து, அவர்களை அங்கிருந்து செல்லுமாறு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன்போது, குறித்த குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியதுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர் கைது

அத்துடன், நிலைமையை கட்டுப்படுத்த மேலும் சில அதிகாரிகள் சென்ற போது, குறித்த குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் 16 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள். கைது செய்யப்பட்ட இரத்மலானை, பிலியந்தலை மற்றும் அஹுங்கல்ல பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply