பிரித்தானியாவில் தமிழர் பகுதியில் ரஷ்ய உளவாளிகள்: தீவிரமாகும் பாதுகாப்பு விசாரணை

பிரித்தானியாவில் தமிழர் பகுதியில் ரஷ்ய உளவாளிகள்: தீவிரமாகும் பாதுகாப்பு விசாரணை

  • world
  • August 17, 2023
  • No Comment
  • 76

ரஷ்யாவிக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் பிரித்தானியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பிரதிவாதிகள் மூவரும் பல்கேரிய பிரஜைகள் எனவும் இவர்களில் இருவர், பிரித்தானியாவில் தமிழர் செறிந்து வாழும் அரோப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தவறான நோக்கத்துடன் கூடிய அடையாள ஆவணங்களை வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, மேலும் அவை போலியானவை என்பதும் பிரித்தானிய பாதுகாப்பு துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும், ரஷ்ய பாதுகாப்பு சேவையில் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் பிரித்தானிய, பல்கேரியா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், குரோஷியா, ஸ்லோவேனியா, கிரீஸ் மற்றும் செக் குடியரசுக்கான கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகள் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.   

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply