பிரித்தானியாவில் தமிழர் பகுதியில் ரஷ்ய உளவாளிகள்: தீவிரமாகும் பாதுகாப்பு விசாரணை

பிரித்தானியாவில் தமிழர் பகுதியில் ரஷ்ய உளவாளிகள்: தீவிரமாகும் பாதுகாப்பு விசாரணை

  • world
  • August 17, 2023
  • No Comment
  • 48

ரஷ்யாவிக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் பிரித்தானியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பிரதிவாதிகள் மூவரும் பல்கேரிய பிரஜைகள் எனவும் இவர்களில் இருவர், பிரித்தானியாவில் தமிழர் செறிந்து வாழும் அரோப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தவறான நோக்கத்துடன் கூடிய அடையாள ஆவணங்களை வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, மேலும் அவை போலியானவை என்பதும் பிரித்தானிய பாதுகாப்பு துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும், ரஷ்ய பாதுகாப்பு சேவையில் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் பிரித்தானிய, பல்கேரியா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், குரோஷியா, ஸ்லோவேனியா, கிரீஸ் மற்றும் செக் குடியரசுக்கான கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகள் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.   

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply