பிரித்தானியாவில் தமிழர் பகுதியில் ரஷ்ய உளவாளிகள்: தீவிரமாகும் பாதுகாப்பு விசாரணை

பிரித்தானியாவில் தமிழர் பகுதியில் ரஷ்ய உளவாளிகள்: தீவிரமாகும் பாதுகாப்பு விசாரணை

  • world
  • August 17, 2023
  • No Comment
  • 15

ரஷ்யாவிக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் பிரித்தானியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பிரதிவாதிகள் மூவரும் பல்கேரிய பிரஜைகள் எனவும் இவர்களில் இருவர், பிரித்தானியாவில் தமிழர் செறிந்து வாழும் அரோப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தவறான நோக்கத்துடன் கூடிய அடையாள ஆவணங்களை வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, மேலும் அவை போலியானவை என்பதும் பிரித்தானிய பாதுகாப்பு துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும், ரஷ்ய பாதுகாப்பு சேவையில் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் பிரித்தானிய, பல்கேரியா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், குரோஷியா, ஸ்லோவேனியா, கிரீஸ் மற்றும் செக் குடியரசுக்கான கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகள் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.   

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply