லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் பற்றிய விசேட அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் பற்றிய விசேட அறிவிப்பு

  • local
  • October 3, 2023
  • No Comment
  • 55

மாதாந்த சமையல் எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம், இம்முறை விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதாந்த விலை சூத்திரத்தின்படி எதிர்வரும் 4ம் திகதி புதிய விலை அறிவிக்கப்படும்.

கடந்த மாதம் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
அதன்படி, அதன் புதிய விலை 3,127 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,256 ரூபாவாகும்.

2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 587 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், கடந்த மாதம் எரிவாயு விலை சூத்திரத்தின்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,045 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாத வகையில் 145 ரூபாவால் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, 12.5 கிலோ கிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3,835 ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.59 உயர்ந்து புதிய விலை ரூ.1,535.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply