James Anderson: “இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை”- 41 வயதை நெருங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்

James Anderson: “இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை”- 41 வயதை நெருங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 53

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வு குறித்துப் பேசியிருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 2002-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுமாகியிருக்கிறார்.

டெஸ்ட் , ஒருநாள், சர்வதேச டி20  போட்டிகளில் பங்கேற்று விளையாடிய இவர் இதுவரை 976 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அதோடு 182 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடி 689 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.  தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் ஆஷஸ் தொடரில் அவர் விளையாடி வருகிறார். இந்த ஆஷஸ் தொடரில் 3 டெஸ்டில் ஆடி வெறும் 4 விக்கெட் மட்டுமே எடுத்திருக்கிறார்.

 

Anderson

இதனால் கடைசி டெஸ்டுடன் அவர் ஓய்வு பெறலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வரும் ஜூலை 30 ஆம் தேதி  41 வயதை எட்டவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வு குறித்து பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “ இப்போதைக்கு ஓய்வு பற்றி எனக்கு எந்த எண்ணமும் இல்லை. இந்த ஆஷஸ் தொடரில் நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எல்லா வீரர்களும்  இதுமாதிரியான ஒரு சூழலை தங்களது கெரியரில் சந்திப்பார்கள்.

ஆனால் இது போன்ற பெரிய தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது சற்று ஏமாற்றம்தான். பயிற்சியாளர் மெக்கல்லனுடனும், கேப்டன் பென் ஸ்டோக்சுடனும் பேசினேன்.

அவர்கள் நான் அணியில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். நானும் என்னுடைய சிறப்பான ஆட் டத்தை  வெளிப்படுத்த வேண்டும் என்று விருப்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.  

Related post

8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு இலங்கையின்…
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.வரலாற்று சாதனைஇந்நிலையில்,…

Leave a Reply