சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தகவல்

சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தகவல்

  • local
  • September 27, 2023
  • No Comment
  • 66

இந்த ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் வருமான சேகரிப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து சர்வதேச நாணய நிதியம் கரிசனை கொண்டுள்ளது.

எனினும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கான 2.9 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை இது தடம் புரளச் செய்ய வாய்ப்பில்லை என வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு
கடந்த மார்ச் மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட நான்கு வருட கடன் ஒப்பந்தத்தின் முதல் மறுஆய்வின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், நிதியமைச்சராக இருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்தனர்.
இந்த நிலையில் முதல் மதிப்பாய்வை நிறைவேற்றுவதற்குத் தேவையான பெரும்பாலான தேவைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றமும் இதில் அடங்கும் என்று இலங்கை அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதிய குழு, தமது இரண்டு வார பயணத்தின் முடிவில் இன்று (27.09.2023) புதன்கிழமை பிற்பகல் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply