Harmanpreet kaur: ` 2 போட்டிகளில் ஆடக்கூடாது’ ஹர்மன்ப்ரீத்துக்கு ICC விதித்த தடையும் பின்னணியும்!

Harmanpreet kaur: ` 2 போட்டிகளில் ஆடக்கூடாது’ ஹர்மன்ப்ரீத்துக்கு ICC விதித்த தடையும் பின்னணியும்!

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 109

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட ஐ.சி.சி தடை விதித்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது.

இதில் டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஓடிஐ தொடரின் 3-வது போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் மைதானத்தில் பேட்டை வைத்து  ஸ்டெம்புகளை அடித்து அம்பயர்களை விமர்சித்திருந்தது  கடும் சர்ச்சையைக் கிளப்பியது. 

 
ஹர்மன்பிரீத் கவுர்

அதுமட்டுன்றி ஆட்டத்துக்குப் பிறகு கோப்பையை பகிர்ந்தளிக்கும் நிகழ்வின்போதும் வங்கதேச வீராங்கனைகளிடம் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதமும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  அவரது இந்த செயல்பாடுகள் விதிகளை மீறும் செயல் என்பதால் அவர் அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி தடையை  விதித்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது போட்டி கட்டணத்தில் 75 சதவிகிதத்தை அபராதமாகச்  செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளை ஹர்மன்பிரீத் கவுரால் விளையாட முடியாமல் போகும்.

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply