பைடனுக்கு கொலை மிரட்டல்: ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டுக் கொலை

பைடனுக்கு கொலை மிரட்டல்: ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டுக் கொலை

  • world
  • August 11, 2023
  • No Comment
  • 68

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களும், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் அமெரிக்காவின் உடா மாநிலத்தை சேர்ந்த க்ரெய்க் ராபர்ட்ஸன் என்ற ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஜனாதிபதி பைடனை குறித்து தீவிரமான கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

சர்ச்சைக்குறிய முகநூல் பதிவு
பைடன் தொடர்பில் கடந்த 2022ம் ஆண்டு இவர் வெளியிட்ட பதிவு ஒன்றில் ஜனாதிபதியை கொலை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது, முதலில் ஜோ, பிறகு கமலா என குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக கிரிமினல் வழக்கு ஒன்றை தொடர்ந்த மன்ஹாட்டன் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் என்பவரையும் கொல்லப் போவதாக கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடன் உடா மாநிலத்திற்கு வருகை தருவதால் தனது எம்24 ஸ்னைப்பர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தும் காலம் வந்து விட்டது என்றும் குறித்த நபர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் பலவகை துப்பாக்கிகளையும் அவர் பதிவிட்டிருந்தார்.

கைது நடவடிக்கை
இந்நிலையில் உடா மாநிலத்தில், ப்ரோவோ எனும் இடத்தில் உள்ள கொலை மிரட்டல் விடுத்த வீட்டிற்கு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளுடன் அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த கைது நடவடிக்கையில் க்ரெய்க் ராபர்ட்ஸன் சுட்டுக்கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் க்ரெய்க் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசு இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply