இஸ்ரேலுக்கான விமான சேவைகள் இடைநிறுத்திய கனடா

இஸ்ரேலுக்கான விமான சேவைகள் இடைநிறுத்திய கனடா

  • world
  • October 9, 2023
  • No Comment
  • 72

எயார் கனடா விமான சேவை இஸ்ரேலுக்கான விமான பயணங்களை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தியுள்ளது.

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் எயார் கனடா விமான சேவை நிறுவனம் தெல் அவிவிற்கான விமான போக்குவரத்தை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெல் அவிவிற்கும் டொரன்டோவுக்கும் இடையில் நாள்தோறும் எயார் கனடா விமான சேவை விமான போக்குவரத்து செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொன்றியலிலிருந்து இருந்து தெல் அவிவிற்கு மூன்று தடவைகள் விமான பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் சுமார் 2000 கனடியர்கள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதனால் பல கனடியர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply