Asian Games: தடைகளை மீறி ஆசியப் போட்டிக்குள் நுழையும் இந்திய கால்பந்து அணி! – சாத்தியமானது எப்படி?

Asian Games: தடைகளை மீறி ஆசியப் போட்டிக்குள் நுழையும் இந்திய கால்பந்து அணி! – சாத்தியமானது எப்படி?

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 60

ஆசியப் போட்டிகள் 2023-ல் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி இடம் பெறாது என்ற சூழல் நிலவிய நிலையில் இப்போது அந்த ஆசியப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியமானது?

ஆசியப் போட்டிகள் 2023-யில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி இடம் பெறாது என்ற சூழல் நிலவிய நிலையில் இப்போது அந்த ஆசியப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியமானது?

இந்திய ஆடவர் கால்பந்து அணி 18-ஆவது இடத்திலும் மகளிர் அணி 11-ஆவது இடத்தில் இருப்பதால், இந்திய அணியால் ஆசியப் போட்டிகளில் விளையாட முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் அந்த அணியினர் மட்டும் இல்லை இந்திய கால்பந்து ரசிகர்களிடமும் இருந்தது.

Stimac-coach

இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டிமாக், பிரதமர் மோடிக்கு எழுதிய கடித்ததில் அவர் “ஒரு திறமைவாய்ந்த அணி இந்தியா கொடியுடன் விளையாட மறுக்கபடுவது ஏன்?” எனக் குறிப்பிட்டு அணியை ஆசிய போட்டிகளில் ஆட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அவர் கூறியதாவது “ஆசியப் போட்டிகள் முக்கியமானது, எவ்வளவு சர்வதேச போட்டிகள் விளையாடுகிறோமோ அவ்வளவு முன்னேற்றத்தை இந்திய அணி காணும்”. எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பலதரப்பு கோரிக்கைகளுக்குப் பிறகு, இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் வருகின்ற ஆசியப் போட்டிகள் 2023-ல் விளையாடும் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். அவரது அறிக்கையில் “தற்போதுள்ள அளவுகோலின்படி தகுதி பெறாத இரு அணிகளுமே பங்கேற்பதற்கு வசதியாக இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீபத்திய காலங்களில் அவர்களின் செயல்பாடுகளை மனதில் கொண்டு, தளர்வு வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது” எனக் குறிபிட்டுள்ளார்.

இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டிமாக் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியது மட்டும் இல்லாமல், “இந்த ஆசியப் போட்டிகளில் சீனா மிகவும் கடினமான போட்டியாளர்களாக இருப்பர் என்றும் வங்காளதேசமும் இந்தியாவும் சமமான போட்டியர்கள்தான். உலகக்கோப்பை தகுதிச்சுற்று எங்களுக்கு அதிர்ஷ்டமாக இல்லை ஏன் என்றால் எங்களுடன் போட்டிப்போட ஆசியாவில் சிறந்த அணியான கத்தார் இருக்கிறது மேலும் குவைத் இருக்கிறது, இந்தியா கண்டிப்பாக இரண்டாம் இடம் பிடிக்கும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவிதுள்ளார்.

ஆசியப் போட்டிக்கு இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி தேர்வாகி இருப்பது இந்தியா கால்பந்து ரசிகர்களை மகிழச்சியில் ஆழ்த்தியுள்ளன.

Related post

8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு இலங்கையின்…
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.வரலாற்று சாதனைஇந்நிலையில்,…

Leave a Reply