
Asian Games: தடைகளை மீறி ஆசியப் போட்டிக்குள் நுழையும் இந்திய கால்பந்து அணி! – சாத்தியமானது எப்படி?
- Sports
- August 3, 2023
- No Comment
- 60
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
ஆசியப் போட்டிகள் 2023-ல் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி இடம் பெறாது என்ற சூழல் நிலவிய நிலையில் இப்போது அந்த ஆசியப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியமானது?
ஆசியப் போட்டிகள் 2023-யில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி இடம் பெறாது என்ற சூழல் நிலவிய நிலையில் இப்போது அந்த ஆசியப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியமானது?
இந்திய ஆடவர் கால்பந்து அணி 18-ஆவது இடத்திலும் மகளிர் அணி 11-ஆவது இடத்தில் இருப்பதால், இந்திய அணியால் ஆசியப் போட்டிகளில் விளையாட முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் அந்த அணியினர் மட்டும் இல்லை இந்திய கால்பந்து ரசிகர்களிடமும் இருந்தது.
இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டிமாக், பிரதமர் மோடிக்கு எழுதிய கடித்ததில் அவர் “ஒரு திறமைவாய்ந்த அணி இந்தியா கொடியுடன் விளையாட மறுக்கபடுவது ஏன்?” எனக் குறிப்பிட்டு அணியை ஆசிய போட்டிகளில் ஆட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அவர் கூறியதாவது “ஆசியப் போட்டிகள் முக்கியமானது, எவ்வளவு சர்வதேச போட்டிகள் விளையாடுகிறோமோ அவ்வளவு முன்னேற்றத்தை இந்திய அணி காணும்”. எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் பலதரப்பு கோரிக்கைகளுக்குப் பிறகு, இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் வருகின்ற ஆசியப் போட்டிகள் 2023-ல் விளையாடும் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். அவரது அறிக்கையில் “தற்போதுள்ள அளவுகோலின்படி தகுதி பெறாத இரு அணிகளுமே பங்கேற்பதற்கு வசதியாக இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீபத்திய காலங்களில் அவர்களின் செயல்பாடுகளை மனதில் கொண்டு, தளர்வு வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது” எனக் குறிபிட்டுள்ளார்.
இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டிமாக் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியது மட்டும் இல்லாமல், “இந்த ஆசியப் போட்டிகளில் சீனா மிகவும் கடினமான போட்டியாளர்களாக இருப்பர் என்றும் வங்காளதேசமும் இந்தியாவும் சமமான போட்டியர்கள்தான். உலகக்கோப்பை தகுதிச்சுற்று எங்களுக்கு அதிர்ஷ்டமாக இல்லை ஏன் என்றால் எங்களுடன் போட்டிப்போட ஆசியாவில் சிறந்த அணியான கத்தார் இருக்கிறது மேலும் குவைத் இருக்கிறது, இந்தியா கண்டிப்பாக இரண்டாம் இடம் பிடிக்கும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவிதுள்ளார்.
ஆசியப் போட்டிக்கு இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி தேர்வாகி இருப்பது இந்தியா கால்பந்து ரசிகர்களை மகிழச்சியில் ஆழ்த்தியுள்ளன.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021