Manipur Violence: “நான் கட்டிய கால்பந்து மைதானத்தை எரித்துவிட்டார்கள்!”- சிங்லென்சனா சிங் வருத்தம்

Manipur Violence: “நான் கட்டிய கால்பந்து மைதானத்தை எரித்துவிட்டார்கள்!”- சிங்லென்சனா சிங் வருத்தம்

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 24

மணிப்பூரைச் சேர்ந்த இந்தியக் கால்பந்து வீரரான சிங்லென்சனா சிங் கோன்ஷம் மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டது குறித்துப் பேசியிருக்கிறார்.

பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில் தொடர்ந்து மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது.

குறிப்பாக மே 4-ம் தேதி குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேசிய அளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இந்த மணிப்பூர் கலவரத்திற்கு எதிராகப் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உட்படப் பலரும் கண்டனம் தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர்.

சிங்லென்சனா சிங் கோன்ஷம்

இந்தக் கலவரத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்களது உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் மணிப்பூரைச் சேர்ந்த இந்தியக் கால்பந்து வீரரான சிங்லென்சனா சிங் கோன்ஷம் இந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய சிங்லென்சனா, “இந்தக் கலவரம் எங்களிடமிருந்த அனைத்தையும் பறித்துவிட்டது. எங்கள் வீடு தீக்கிரையாக்கப்பட்ட செய்தியை நான் கேள்விப்பட்டேன். அதுமட்டுமின்றி சுராசந்த்பூரில் நான் கட்டிய கால்பந்து  மைதானமும் எரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தியைக் கேட்டு நான் மன வேதனை அடைந்தேன். ஏனென்றால், திறமை இருந்தும் பணம் கட்டி பயிற்சிக்குச் செல்ல முடியாத பல இளம் வயதினர் பயிற்சி பெற, ஒரு மைதானத்தை உருவாக்க வேண்டும்.

அவர்கள் சிறந்த வீரர்களாக உருவாகி நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கனவாக இருந்தது. ஆனால் இந்த வன்முறைச் சம்பவத்தால் என் கனவு சிதைந்திருக்கிறது” என்று மனம் வருந்திப் பேசியிருக்கிறார். 

Related post

8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு இலங்கையின்…
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.வரலாற்று சாதனைஇந்நிலையில்,…

Leave a Reply