முள்ளிவாய்க்கால் நினைவின் 16 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று
- local
- May 18, 2025
- No Comment
- 39
ஈழத்தில் யுத்தத்தில் உயிர் தியாகம் செய்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும்
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று(18) நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானதுடன் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுக்கஞ்சியும் வழங்கப்பட்ட்து .
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நடைபெறுகின்றது.
அதற்கமைய காலை 10.15 அளவில் முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு, 10.29க்கு மணி ஒலி எழுப்பப்பட்டது.
இதனையடுத்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், அதன் பின்னர் நினைவேந்தலில் பங்கேற்றவர்களால் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.