2025 IPL தொடர் காலவரையரையின்றி இடைநிறுத்தம்

2025 IPL தொடர் காலவரையரையின்றி இடைநிறுத்தம்

  • Sports
  • May 9, 2025
  • No Comment
  • 60

2025 இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் காலவரையரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற நிலைமையின் காரணமாக  ஐபிஎல் தொடரை இடைநிறுத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் போர் நிலவும் போது விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது உகந்ததல்ல என இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Punjab Kings மற்றும் Delhi Capitals அணிகளுக்கு இடையில் நேற்று(08) நடைபெற்ற போட்டி இடைநடுவில் கைவிடப்பட்டது.

போட்டியின் போது மைதானத்தின் மின் விளக்குகள் தீடிரென அணைந்ததுடன் தொழில்நுட்ப காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற 2 அணிகளும் உடனடியாக வௌியேற்றப்பட்டதுடன் அதனை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டனர்.

கடந்த மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமான ஐ.பி.எல் தொடரில் நேற்று(08) இடைநிறுத்தப்பட்ட போட்டி உட்பட 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளதுடன் 12 போட்டிகள் எஞ்சியுள்ளன.

இதேவேளை, பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் – இந்தியா இடையேயான மோதல் வலுவடைந்துவரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரில் எஞ்சியுள்ள 8 போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…