ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்

ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்

  • world
  • April 20, 2025
  • No Comment
  • 45

ஷேக் ஹசீனாவை கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியை பங்களாதேஸ் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஸில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து யூனுஸ் தலைமையில் பங்களாதேஸில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனவே அவரை தமது நாட்டிற்குத் திருப்பி அனுப்பும்படி பங்களாதேஸ் இடைக்கால அரசாங்கம் இந்தியாவைக் கடந்த ஆண்டு கோரியிருந்தது.

எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் பெரிதாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இன்டர்போலின் உதவியை பங்களாதேஸ் நாடியுள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…