காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

  • world
  • October 31, 2023
  • No Comment
  • 105

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 முதல், காசாவில் குறைந்தது 3,195 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன.

இதில் மேற்குக் கரையில் 33 மற்றும் இஸ்ரேலில் 29 உட்பட மொத்தமாக 3,257 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் மூன்று வாரங்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒரு வருடம் முழுவதும், உலகளவில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் – ஆயுத மோதலில் கொல்லப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

காசாவில் உயிரிழந்த 7,703 பேரில் 40% க்கும் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசம் மற்றும் இஸ்ரேலில் உள்ள மொத்த இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள். காசாவில் மேலும் 1,000 குழந்தைகள் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டதாகக் கருதப்படுவதால், இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என மேலும் தெரிவிக்க படுகிறது.

காசாவில் குறைந்தது 6,360 குழந்தைகளும், மேற்குக் கரையில் குறைந்தது 180 குழந்தைகளும், இஸ்ரேலில் குறைந்தது 74 குழந்தைகளும் காயமடைந்துள்ளதாக save the children அமைப்பு தெரிவிக்கிறது.

picture credit : istockphoto.com

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply