வரும் பெரும்போகத்துக்கான உர விநியோகம் இன்று ஆரம்பம்

வரும் பெரும்போகத்துக்கான உர விநியோகம் இன்று ஆரம்பம்

  • local
  • October 10, 2023
  • No Comment
  • 48

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான 21 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரத்தை இன்று(10) முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்க உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, லங்கா உர நிறுவனமும் கொழும்பு வர்த்தக உர நிறுவனமும் விநியோகப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

50 கிலோகிராம் யூரியா உரம் மூடை ஒன்று 9 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

நெல் பயிரிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் உர கொள்வனவுக்காக ஒரு ஹெக்டயருக்கு 15ஆயிரம் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply