இரண்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்று..!!

இரண்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்று..!!

  • local
  • October 6, 2023
  • No Comment
  • 50

சாவகச்சேரி கச்சாய் வீதி உப்புக்கேணி ஒழுங்கையில் உள்ள க.சந்திரகுமார் என்பவரின் வளர்ப்பு மாடு 02/10 திங்கட்கிழமை இரவு இரண்டு கன்றுகளை ஈன்றதுடன் அதில் ஒரு கன்று இரண்டு கால்களுடன் மாத்திரம் பிறந்துள்ளது.

இதன்போது முதலில் ஈன்ற கன்று ஆரோக்கியமாக இருப்பதுடன்-இரண்டாவதாக பிரசவித்த இரண்டு கால்களுடன் மாத்திரம் பிறந்த கன்று பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.

மேற்படி மாட்டுக் கன்று வெறுமனே இரண்டு கால்களுடன் மாத்திரம் பிறந்துள்ள நிலையில் அதற்கு தலை இருக்கவில்லை என்பதுடன் பிறந்து சிறிது நேரம் அதன் உடலில் உயிர்த் துடிப்பு இருந்ததாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த அதிசய கன்றினை கிராம மக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்-அத்துடன் உரிமையாளரால் இது தொடர்பாக கால்நடை வைத்திய அதிகாரி பணிமனைக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply