கனடாவில் இந்த வகை வாகனங்கள் தீப்பற்றிக் கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !

கனடாவில் இந்த வகை வாகனங்கள் தீப்பற்றிக் கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !

  • world
  • October 2, 2023
  • No Comment
  • 53

கனடாவில் ஹய்யுண்டாய் மற்றும் கியா ரக வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹய்யுண்டாய் நிறுவனத்தின் சுமார் மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 942 வாகனங்கள் கனடாவில் இருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும், அமெரிக்காவிலிருந்து 16 லட்சத்து 4251 வாகனங்கள் வாபஸ் பெற்று பல் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யப்பட்ட சில வகை மாடல்களை இவ்வாறு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை வாகனங்கள் திடீரென தீப்பற்றிக் கொள்ளக்கூடிய ஒரு சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் பிரேக் ஒயில் கசிவு இலத்திரனியல் ரீதியாக தொழிற்பட்டு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்போது அல்லது பயணிக்கும் போது தீ பற்றி கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுவரையில் இந்த தீப்பிடிப்புகள் காரணமாக எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கியா நிறுவனத்தின் சிலவகை வாகனங்களும் கனடாவில் இருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக 2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யப்பட்ட சில மாடல் கார்கள் இவ்வாறு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கியாராக வாகனங்கள் மொத்தமாக 276225 வாகனங்கள் கனடாவில் இருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply