இலங்கையர்களிடம் ஐ.நா சபை விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையர்களிடம் ஐ.நா சபை விடுத்துள்ள கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பணம், தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு மோசடி செய்பவர்களிடம் கவனமாக இருக்குமாறு அந்த அமைப்பின் இலங்கை அலுவலகம் வலியுறுத்துகிறது.

சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி சேவைகள், இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அமைப்பின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி மோசடியான மற்றும் தவறான தகவல்கள் மீண்டும் பரப்பப்படுவதை அவதானித்ததாக அமைப்பு அறிவித்துள்ளது.

எனவே, தங்கள் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி பணத்தைப் பெறுவதற்கான சூழ்நிலைகள் உள்ளமையினால் தனிப்பட்ட தகவல்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கையர்களிடம் கேட்டுக்கெள்ளப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு செயல்முறை

ஐக்கிய நாடுகள் சபை தனது ஆட்சேர்ப்பு செயல்முறையின் எந்தவொரு கட்டத்திலும் கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் சீட்டிழுப்பு அல்லது பல்வேறு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்லை எனவும் தொடர்புடைய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…

Leave a Reply