மகிந்த – ரணில் இரகசிய சந்திப்பு: கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள அதிர்வு

மகிந்த – ரணில் இரகசிய சந்திப்பு: கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள அதிர்வு

  • local
  • August 21, 2023
  • No Comment
  • 69

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மொட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவும் அண்மையில் இரகசியமாகச் சந்தித்து உரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பு- சங்கிரில்லா உணவகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைய மகனின் ஏற்பாடு

மகிந்தவின் இளைய மகன் அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தார் என்று கூறப்படுகின்றது. ஆனால், மகிந்தவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச இதற்கு எதிர்ப்பு என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபைக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ராஜபக்ச குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான எம்.பி. ஒருவரே ரணிலும் மகிந்தவும் இரகசியமாகச் சந்தித்து உரையாடிய தகவலை அம்பலப்படுத்தியுள்ளார் என தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply