உக்ரைனின் தானிய கிடங்குகளை தகர்த்த ரஷ்யா: அமெரிக்கா கடும் கண்டனம் – உலக செய்திகள்

உக்ரைனின் தானிய கிடங்குகளை தகர்த்த ரஷ்யா: அமெரிக்கா கடும் கண்டனம் – உலக செய்திகள்

  • world
  • August 18, 2023
  • No Comment
  • 79

உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து திடீரென்று ரஷ்யா விலகிய பின்னர், உக்ரைனின் தானிய கிடங்குகள் மீது தொடர் ட்ரோன் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

இதற்கமைய புதன்கிழமை அவ்வாறான தாக்குதலை முன்னெடுத்த ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

அத்துடன் உக்ரேனிய தானிய ஏற்றுமதியை உறுதி செய்வதற்கான மாற்று வழிகளை அடையாளம் காண நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடனடியாக உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இணைய ரஷ்யா முன்வர வேண்டும் எனவும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஜூலை 17ம் திகதி உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பின்னர், தொடர்ந்து தானிய கிடங்குகள் மீது தாக்குதல் முன்னெடுத்து வருகிறது. 

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply