கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மர்ம பொதி

கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மர்ம பொதி

  • local
  • August 16, 2023
  • No Comment
  • 66

கனடாவில் இருந்து மஹரகமவில் உள்ள போலி முகவரிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட ஒரு மர்ம பொதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கமைய, அவ்வாறு கிடைத்த கோடி ரூபா பெறுமதியான ஹாஷீஷ் போதை பொருள் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.

கடந்த மே மாதம், இந்த பொதி மத்திய தபால் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுங்கத்துறை அதிகாரிகள்

யாரும் பொதியை பெற முன்வராததால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை, சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதற்கமைய, அந்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இலங்கை தபால் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் இந்த பொதியை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொம்மைகள்
நாய் உணவு மற்றும் பொம்மைகள் அடங்கிய இரண்டு பொதிகளில் ஹாஷிஷ் மறைத்து வைக்கப்பட்டது.

குறித்த பொதியில் 670 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply