தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • local
  • August 16, 2023
  • No Comment
  • 45

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 313.99 ரூபாவிலிருந்து 314.72 ரூபாவாகவும் விற்பனை விலை 326.88 ரூபாவிலிருந்து 328.02 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

வர்த்தக வங்கிகளில் ரூபாவின் பெறுமதி
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (15.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை முறையே 312.88 மற்றும் 3328.27 ரூபாவாக அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 311.74 ரூபாவாகவும் விற்பனை விலை 326 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 315 மற்றும் 327 ரூபாவாக மாறாமல் உள்ளது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply