புலம்பெயர்வோரை தடுப்பதற்காக 500 மில்லியன் டொலர்களை பெற்ற பிரான்ஸ்: அதிருப்தியில் பிரித்தானியா

புலம்பெயர்வோரை தடுப்பதற்காக 500 மில்லியன் டொலர்களை பெற்ற பிரான்ஸ்: அதிருப்தியில் பிரித்தானியா

  • world
  • August 15, 2023
  • No Comment
  • 86

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக, பிரான்ஸிற்கு 500 மில்லியன் டொலர்களை பிரித்தானியா வழங்கியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியா வழங்கிய 500 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டு, பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல் பிரித்தானியாவுக்கு அதிர்ருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிரான்ஸிலிருந்து ஆங்கிலக் கால்வாய்க்குள் செல்லும், Canche என்னும் நதியில், மீன் பிடிக்கும் வலைகள் தண்ணீரில் மூழ்கிவிடாமல் மிதப்பதற்காக பயன்படும் மிதவைகளை சேர்த்துக் கட்டி, அந்தக் கயிற்றின் இரண்டு ஓரங்களிலும் கற்களை இணைத்து வைத்துள்ளது பிரான்ஸ் தரப்பு.

கேலி செய்யும் கடத்தல்காரர்கள்

அதாவது, பிரான்ஸிலிருந்து ஆங்கிலக்கால்வாய் நோக்கி பயணிக்கும் கடத்தல்காரர்களின் படகுகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரான்ஸின் இந்த நடவடிக்கையானது பிரித்தானிய நாடாளுமன்றில் பெரும் வாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய, “பிரான்ஸ் Canche நதியில் அமைத்துள்ள தடுப்பு, ஒரு வாத்தைக் கூட தடுக்காது” என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான Clarke-Smith தெரிவித்துள்ளார்.

இது மொத்த அமைப்பையும் கேலி செய்வது போல் அமைந்துள்ளதுடன், ஆங்கிலக்கால்வாயில் உயிரிழப்புகள் அதிகரிக்கவும் வழிவகை செய்யும் எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், கடத்தல்காரர்கள் பிரான்ஸின் இந்த செய்கையைக் கண்டால்,கேலி செய்வார்கள் என கூறியுள்ளார்.

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கிப் சென்ற புலம்பெயர்ந்தோர் படகொன்று கடந்த சனிக்கிழமை, ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்ததில், ஆறு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply