புலம்பெயர்வோரை தடுப்பதற்காக 500 மில்லியன் டொலர்களை பெற்ற பிரான்ஸ்: அதிருப்தியில் பிரித்தானியா

புலம்பெயர்வோரை தடுப்பதற்காக 500 மில்லியன் டொலர்களை பெற்ற பிரான்ஸ்: அதிருப்தியில் பிரித்தானியா

  • world
  • August 15, 2023
  • No Comment
  • 57

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக, பிரான்ஸிற்கு 500 மில்லியன் டொலர்களை பிரித்தானியா வழங்கியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியா வழங்கிய 500 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டு, பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல் பிரித்தானியாவுக்கு அதிர்ருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிரான்ஸிலிருந்து ஆங்கிலக் கால்வாய்க்குள் செல்லும், Canche என்னும் நதியில், மீன் பிடிக்கும் வலைகள் தண்ணீரில் மூழ்கிவிடாமல் மிதப்பதற்காக பயன்படும் மிதவைகளை சேர்த்துக் கட்டி, அந்தக் கயிற்றின் இரண்டு ஓரங்களிலும் கற்களை இணைத்து வைத்துள்ளது பிரான்ஸ் தரப்பு.

கேலி செய்யும் கடத்தல்காரர்கள்

அதாவது, பிரான்ஸிலிருந்து ஆங்கிலக்கால்வாய் நோக்கி பயணிக்கும் கடத்தல்காரர்களின் படகுகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரான்ஸின் இந்த நடவடிக்கையானது பிரித்தானிய நாடாளுமன்றில் பெரும் வாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய, “பிரான்ஸ் Canche நதியில் அமைத்துள்ள தடுப்பு, ஒரு வாத்தைக் கூட தடுக்காது” என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான Clarke-Smith தெரிவித்துள்ளார்.

இது மொத்த அமைப்பையும் கேலி செய்வது போல் அமைந்துள்ளதுடன், ஆங்கிலக்கால்வாயில் உயிரிழப்புகள் அதிகரிக்கவும் வழிவகை செய்யும் எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், கடத்தல்காரர்கள் பிரான்ஸின் இந்த செய்கையைக் கண்டால்,கேலி செய்வார்கள் என கூறியுள்ளார்.

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கிப் சென்ற புலம்பெயர்ந்தோர் படகொன்று கடந்த சனிக்கிழமை, ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்ததில், ஆறு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply