82 வருட பாரம்பரியம்; மோதிக்கொண்ட இந்திய – இலங்கை படகுகள்; போட் க்ள்ப்பில் நடந்த போட்டி!

82 வருட பாரம்பரியம்; மோதிக்கொண்ட இந்திய – இலங்கை படகுகள்; போட் க்ள்ப்பில் நடந்த போட்டி!

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 28

82 வருடமாக நடக்கும் இப்போட்டி ஒரு வருடம் சென்னையிலும் ஒரு வருடம் கொழும்புவிலும் மாறி மாறி நடைபெறும்.

சென்னையில் மெட்ராஸ் போட் கிளப்பில் கொழும்பு ரோவிங் க்ளப் மற்றும் மெட்ராஸ் போட் கிளப்புக்கும் இடையே படகுப் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. 82 வருடங்களாக நடக்கும் இப்போட்டி ஒரு வருடம் சென்னையிலும் ஒரு வருடம் கொழும்புவிலும் மாறி மாறி நடைபெறும்.

தீபம் கோப்பைக்காக ஆண்களும் அடையார் கோப்பைக்காக பெண்களும் ஆக்ரோஷமாகப் போட்டியிடுவார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக மூன்று வருடம் முடங்கி இருந்த இப்போட்டி தற்போது கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இப்போட்டியை ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

 

 

race

ஒருவர், இருவர், நால்வர், குழுவாக என நால்வகை பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு அணி சார்பாகவும் 18 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக ஏழு துணை வீரர்களும் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் கொழும்பு ரோவிங் அணியும், பெண்கள் பிரிவில் மெட்ராஸ் போட் கிளப் அணியும், ஒட்டுமொத்தமாக கொழும்பு ரோவிங் க்ளப் அணியும் வென்றன.

இது குறித்து பேசிய படகு போட்டியின் நிர்வாகக் குழுவினர், “ஒவ்வொரு விளையாட்டுக்கும் வரலாறு உண்டு. களத்தில் இறங்கி விட்டால் ஒவ்வொருவரும் வீரனே. இத்தனை ஆண்டுகளாக இவ்விளையாட்டில் போட்டியிருக்கிறதே தவிர பொறாமை இருந்ததில்லை” எனக் கூறினர்.

Related post

8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு இலங்கையின்…
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.வரலாற்று சாதனைஇந்நிலையில்,…

Leave a Reply