2026-ல் AI துறையில் முக்கிய இடம் பிடிக்கும்  Apple நிறுவனம்

2026-ல் AI துறையில் முக்கிய இடம் பிடிக்கும் Apple நிறுவனம்

2026-ல் Apple நிறுவனம் AI துறையில் முன்னிலை பெறவுள்ளதாக அறிக்கையொன்று கூறுகிறது.

Apple நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக AI துறையில் போட்டியாளர்களை விட பின்தங்கியிருந்தது.

2024-ல் WWDC மாநாட்டில் Apple Intelligence என்ற பெயரில் AI அம்சங்களை அறிமுகப்படுத்தினாலும், அவை பெரும்பாலும் Writing Tools, Image Playground, Clean Up, Genmoji போன்ற அடிப்படை அம்சங்களாகவே கருதப்பட்டன. மேலும், AI Notification Summaries அம்சம் பிழைகள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

2025 முழுவதும் Apple, AI-யில் பெரிய முன்னேற்றம் எடுக்க முடியாமல் இருந்தது.

ஆனால், The Information வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, 2026-ல் Apple தனது AI பயணத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான முக்கிய காரணங்களாக Private Cloud Compute (PCC) மற்றும் NPU-enabled chipsets மூலம் வலுவான AI அடித்தளத்தை Apple உருவாக்கியமை ,
OpenAI-க்கு அப்பால், Anthropic மற்றும் Google போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றமை , மற்றும் Apple-ன் AI ஆராய்ச்சி குழு பல்வேறு புதுமையான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளமை ஆகிய காரணங்கள் குறிப்பிடப்படுகிறது .

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…