நைஜரிலிருந்து பிரான்ஸ் பிரஜைகள் வெளியேற்றம்

நைஜரிலிருந்து பிரான்ஸ் பிரஜைகள் வெளியேற்றம்

நைஜர் நாட்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் போராட்டங்கள் வலுப்பெற்று வருவதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதன் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்ற தொடங்கியுள்ளது.

260 பேருக்கும் மேற்பட்ட பிரான்ஸ் குடிமக்களை ஏற்றிக் கொண்டு, அந்நாட்டின் தலைநகரமான நியாமியில் இருந்து முதல் விமானம் இன்று(02.08.2023)புறப்பட்டுள்ளது.பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களைக் கொண்ட அந்த விமானம், இன்று பாரிசில் தரையிறங்கியுள்ளது.

மக்களை காப்பாற்றும் முயற்சி

நைஜரின் வான்வெளி மூடப்பட்டதுள்ளதால், அந்நாட்டில் தமது மக்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவதாக பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.

எஞ்சியிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், நியாமியிலுள்ள விமான நிலையத்திற்குச் செல்லும்படியும் பிரான்ஸ்அரசாங்கம் தமது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.இத்தாலியும் அதன் குடிமக்களை நைஜர் நாட்டில் இருந்து வெளியேற்றி வருகிறது. 36 இத்தாலியர்களையும், 21 அமெரிக்கர்களையும், ஒரு பிரிட்டிஷ் நாட்டவரையும் ஏற்றிச் சென்ற விமானம் இன்று காலை ரோம் நகரைச் சென்றடைந்துள்ளது.


Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply