செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது
- local
- July 1, 2025
- No Comment
- 56
செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மக்களின் இதயங்களைக் குணப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த அகழ்வு பணிகள் நிறைவடையும் வரையில், இந்த விடயத்தில் இறுதி முடிவுக்கு வர முடியாது.
தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது சில சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரின் ஆடை அல்லது அதிலிருந்த இலக்க தகடு ஏதாவது மீட்கப்படலாம்.
இதன்போது, விசாரணைகள் வேறு பக்கம் திரும்பும், இந்தநிலையில், இன்னும் 15 நாட்களுக்கு அங்கு கண்காணிப்பு, பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, அந்த 15 நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் இறுதி முடிவுக்கு வரமுடியும் என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த இடம் யுத்தம் நிலவிய பிரதேசமாகும். அங்கு, சகல பக்கங்களிலிருந்தும் துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் யாருடைய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள்? என்பது மட்டுமே தற்போது தெரியாமல் உள்ளது. எனவே, உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை தற்போது தேவையற்ற விடயமாகும்.
மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மக்களின் இதயங்களைக் குணப்படுத்த வேண்டும்.
இருப்பினும், இதயங்களைக் குணப்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக, மீண்டும் வெறுப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இதனூடாக இலங்கைக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை.
சர்வதேச சக்திகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இலங்கையின் இனங்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையே உள்ளது. அவர்களின் தனிப்பட்ட அரசியலுக்காகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.