கொட்டஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம்
- local
- May 8, 2025
- No Comment
- 64
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தினால் டுப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவு வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உயிர் இழந்த மாணவியின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கபடுகிறது .