இலங்கை பிரதமர் – உலக வங்கி தலைவர் சந்திப்பு

இலங்கை பிரதமர் – உலக வங்கி தலைவர் சந்திப்பு

  • local
  • May 8, 2025
  • No Comment
  • 56

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் உலக வங்கி குழுமத்தலைவர் அஜய் பங்கா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

விவசாயம் மற்றும் அதன் முக்கிய துறைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் உலக வங்கி குழுமத்தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தாக்கம் மற்றும் உற்பத்தித்திறனுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் சாத்தியப்பாடுகள் குறித்து இலங்கை ஆராய்வதை அவர் ஊக்குவித்ததாக பிரதமர் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்துவரும் தொழில்துறைகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில் சுகாதாரக் கொள்கையை வலுப்படுத்தவும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை விரிவுபடுத்தவும் அரசாங்கம் தொடர்ந்தும் உழைப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியின் போது உலக வங்கி வழங்கிய ஆதரவிற்காக உலக வங்கிக் குழுமத்தலைவருக்கு பிரதமர் தனது நன்றியையும் இதன்போது தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(07) நாட்டை வந்தடைந்தார்.

இலங்கையின் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தனியார் பிரிவின் அபிவிருத்தி என்பவற்றை இலக்காகக் கொண்டு அவரது விஜயம் அமைந்துள்ளது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…