ஜப்பானை தாக்கும் கானுன் சூறாவளி-விமானப் பயணங்கள் இடைநிறுத்தம்

ஜப்பானை தாக்கும் கானுன் சூறாவளி-விமானப் பயணங்கள் இடைநிறுத்தம்

கானுன் சூறாவளி,  ஜப்பானின் தென்மேற்கு பகுதியான ஒக்கினவா மாகாணத்தை நெருங்கியுள்ளது.

இதில், ஒருவர் பலியாகி இருக்கும் நிலையில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.ஒக்கினவாவில் உள்ள சில இடங்களில் நேற்று காலை, மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்று வீசியதோடு, கடந்த 24 மணி நேரத்தில் 250 மில்லிமீட்டர் மழை பெய்ததாக ஜப்பானிய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் வெளியேற்றம்

சூறாவளி வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதால், சுற்றுலாவிற்குப் புகழ் பெற்ற அம்மாகாணத்தில் உள்ள 7 இலட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதேவேளையில், அப்பகுதியிலுள்ள வீடுகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, நாஹவில் விமான நிலையம் நேற்று(02.08.2023)இரண்டாவது நாளாகவும் முழுமையாக மூடப்பட்ட நிலையில் சுமார் 951 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply