கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி
- localworld
- January 9, 2026
- No Comment
- 18
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த சேர்ந்த 35 வயதான அனுஷா ராஜகாந் உயிரிழந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் Islington Avenue மற்றும் Dixon Road சந்திப்பில் வீதியை கடக்க முற்பட்டவேளை கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெண் மீது மோதியுள்ளார். விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக ரொரன்ரோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.