உக்ரைன், ரஷ்ய இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம்

உக்ரைன், ரஷ்ய இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம்

  • world
  • January 2, 2026
  • No Comment
  • 23

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது புத்தாண்டு உரையில் ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள 10 சதவீத இணக்கப்பாடே உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று குறிப்பிட்ட அவர், உக்ரைனின் அழிவின் மூலம் கிடைக்கும் அமைதியைத் தாம் விரும்பவில்லை என்றும், நாட்டின் இறையாண்மையில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும் உறுதியாகக் கூறினார்.

இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் இல்லத்தை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தையைத் திசைதிருப்பவே ரஷ்யா இத்தகைய பொய்களைப் பரப்புவதாக உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு தெரிவித்துள்ளன.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், ரஷ்யாவுடனான தனது நாட்டின் கூட்டணி அசைக்க முடியாதது எனப் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், ஜனவரி 6-ஆம் திகதி பாரிஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடுகளின் கூட்டம், அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் முக்கிய  பங்காற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…