இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

  • Sports
  • October 20, 2023
  • No Comment
  • 54

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன.

இந்த அழைப்பு இலங்கையின் தேசிய தேர்வாளர் குழுவால் விடுக்கப்பட்டுள்ளது.

பிரமோத் மதுஷனை அணிக்கு அழைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், துஷ்மந்த சமீரா முழுமையாக குணமடைந்துள்ளதால் அவரை அணிக்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தேர்வாளர் குழு தீர்மானித்திருந்தது.

மேலும், துஷ்மந்த சமீரா அனுபவமுள்ள பந்துவீச்சாளராக இருப்பதாலும் அவரை அணிக்கு அழைக்க தேர்வாளர் குழு தீர்மானித்திருந்தது.

மதீஷ பத்திரனவின் பந்துவீச்சுக் கையில் ஏற்பட்ட உபாதைக் காரணமாக 10 நாட்களுக்கும் அதிகமாக அவர் ஓய்வில் இருக்க வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

துஷ்மந்த சமீராவை மேலதிக வீரராக சேர்ப்பது 15 பேர் கொண்ட அணிக்குள் அவரை கொண்டு வர அணி நிர்வாகத்திற்கு வாய்ப்பளிக்கும்.

36 வயதான ஏஞ்சலோ மெத்யூஸை அணியில் இணைத்துக்கொள்ளும் திட்டம் முன்னதாக தேர்வாளர்களுக்கு இருக்கவில்லை.

Related post

8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.வரலாற்று சாதனைஇந்நிலையில்,…
இலங்கை அணிக்கு அபராதம்…

இலங்கை அணிக்கு அபராதம்…

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2…

Leave a Reply