கடுவளை கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது

கடுவளை கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 76

கடுவளை 8 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் அடையாளம் தெரியாத சடலமொன்று காணப்படுவதாக கடுவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் மற்றும் உயிரிழந்த நபருக்கு இடையில் காணப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள், முல்லேரியா பகுதியில் வைத்து தாக்கி கொலை செய்து பின்னர் முச்சக்கர வண்டியில் கடுவளை 8 ஆம் கட்டை பகுதியில் சடலத்தை விட்டுச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வெல்லம்பிட்டி மற்றும் அங்கொடை பிரதேசங்களை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, வயர், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply