பெரிய பூசணிக்காயை வளர்த்து காட்சிப்படுத்துகின்றவர்களுக்கு பரிசுத்தொகை..!!

பெரிய பூசணிக்காயை வளர்த்து காட்சிப்படுத்துகின்றவர்களுக்கு பரிசுத்தொகை..!!

  • world
  • October 13, 2023
  • No Comment
  • 73

யார் பெரிய பூசணிக்காயை வளர்த்து காட்சிப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் Half Moon Bay எனும் பகுதியில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் பல விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

உலகின் பூசணிக்காய்களில் தலைநகரம் என கூறப்படும் Half Moon Bay-இல் 50 ஆவது தடவையாக இம்முறை நடந்த போட்டியில், 1,247 கிலோகிராம் எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூசணிக்காய் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மின்னசோட்டா (Minnesota) மாநிலத்தை சேர்ந்த 43 வயதான தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான Travis Gienger என்பவர் போட்டிக்கு கொண்டு வந்திருந்த இந்த மிகப்பெரிய பூசணிக்காய் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவர் வளர்த்த பூசணிக்காய் மிகப் பெரியது என போட்டியில் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கு 30,000 டொலர்கள் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.

டிராவிஸ் 30 வருடங்களுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பிலும் விவசாயத்திலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் வளர்த்த பூசணிக்காய், டிராவிஸ் வளர்த்ததை விட 113 கிலோகிராம்கள் எடை குறைவானது.

2020 ஆம் ஆண்டு முதல் டிராவிஸ் இந்த போட்டியில் தொடர்ச்சியாக பங்கேற்று வருவதுடன், இறுதியாக நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் அவர் பரிசு பெற்றுள்ளார்.

இத்தாலியை சேர்ந்த ஒருவரின் 1226 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் தான் உலகின் மிகப்பெரிய பூசணிக்காய் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருந்தது.

அந்த சாதனையை தற்போது டிராவிஸின் 1,247 கிலோகிராம் பூசணிக்காய் முறியடித்துள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply