காணாமல்போன பாடசாலை மாணவி வீடொன்றிலிருந்து கண்டுபிடிப்பு

காணாமல்போன பாடசாலை மாணவி வீடொன்றிலிருந்து கண்டுபிடிப்பு

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 20

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவில் காணாமல்போன 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் நேற்றுமுன் தினம் (02 .08.2023) வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குருநாகல் பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் தங்கியிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் தீவிர விசாரணை

கடந்த 31 ஆம் திகதி தந்தையுடன் பாடசாலைக்கு சென்ற சிறுமி, அன்று காலை காணாமல்போனதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணையை முன்னெடுத்திருந்த பொலிஸார் சிறுமியின் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாடசாலை சீருடை என்பனவற்றினை குருநாகல் பேருந்து தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்திலிருந்து மீட்டிருந்தனர்.இதற்கமைய, தொடர்ந்தும் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார் தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து சிறுமியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply