
Jailer: “ `ஜெயிலர்’ படத்தின் சிறப்புக் காட்சி ரத்து!” – உண்மையை விளக்கும் திருப்பூர் சுப்ரமணியம்
- Cinema
- August 3, 2023
- No Comment
- 25
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
சமீபத்தில் ஒரு பட ரிலீஸின்போது, ஒரு ரசிகர் இறந்து போனதும் நினைவிருக்கலாம். இப்படி அதிகாலை 4 மணி, 6 மணி சிறப்புக் காட்சிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நிறையவே ஏற்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி காந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், ‘ஜெயிலர்’. இம்மாதம் 10ம் தேதி திரைக்கு வருகிறது.
அதிகாலை சிறப்புக் காட்சியாக ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சிறப்புக் காட்சி இல்லை என்றும், முதல் காட்சியே காலை 9 மணிக்குத்தான் தொடங்குகிறது என்றும் திரையரங்குகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வெளியான ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களுக்கு சிறப்புக் காட்சிகள் இருந்தன. அதே சமயம், ‘பொன்னியின் செல்வன்’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ போன்ற பெரிய படங்களுக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதால் ‘ஜெயிலர்’ படமும் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது என்கிறார்கள்.
சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினேன்.
`அரசு அனுமதி அளித்துள்ள காட்சிகளின் நேரம் என்பது காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரைதான் பல வருடங்களாக இருந்து வரும் நடைமுறை. அதன்படிதான் திரையிட்டு வருகிறோம். ஒருசில படங்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகள் இருந்தபோது, ரசிகர்கள் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்தன. சமீபத்தில் ஒரு பட ரிலீஸின்போது, ஒரு ரசிகர் இறந்து போனதும் நினைவிருக்கலாம். இப்படி அதிகாலை 4 மணி, 6 மணி சிறப்புக் காட்சிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நிறையவே ஏற்படுகிறது.
அதனால்தான் நாங்களே முடிவெடுத்து சில படங்களுக்கு சிறப்புக் காட்சிகள் இல்லாமல் 9 மணி காட்சியில் இருந்து ஆரம்பித்தோம். தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதைப் போல ‘ஜெயிலர்’ படத்துக்கு சிறப்புக் காட்சிகள் இல்லை என்பது தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும் எடுத்த முடிவு அல்ல. தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசி, இருதரப்பினருமே எடுத்த முடிவு. பண்டிகை காலங்களில் சிறப்புக் காட்சிகள் என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. அதை அரசுதான் முடிவெடுக்கும்” என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021