இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்-அமைச்சர் மனுஷ

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்-அமைச்சர் மனுஷ

  • world
  • October 10, 2023
  • No Comment
  • 35

இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இஸ்ரேலின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ,ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்த மோதலின் காரணமாக இலங்கையர் ஒருவர் லேசான காயத்திற்கு உள்ளானார். இவர் தொடர்பிலான தகவல்களை தொடர்ந்து திரட்டிவருகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்

சுமார் 8,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர்.90 வீதமானோர் பராமரிப்பு சேவை தொழிலில் துறையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அங்குள்ள இலங்கையர்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்வதற்காக இரண்டு தொலை பேசி இலக்கங்கள் அறிமுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக 0094716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்தினூடாக அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற உடனடி(Hot Line) தொலைபேசி இலக்கத்தினூடாகா தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்

Related post

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

இளவரசர் வில்லியமும் கேத்தரினும் அபேயை விட்டு வெளியேறி, கிரேட் வெஸ்ட் டோரில் உள்ள இன்னசென்ட் பாதிக்கப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர்களை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் மரணம், சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையால்…
அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார்.…
பாப்பரசரின் முதற்கட்ட  தெரிவு  தீர்மானம் இன்றி முடிவு .

பாப்பரசரின் முதற்கட்ட தெரிவு தீர்மானம் இன்றி முடிவு .

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு…

Leave a Reply