கொழும்பிற்கும் கொல்கத்தாவுக்கும் இடையில் மீண்டும் நேரடி விமானச் சேவை

கொழும்பிற்கும் கொல்கத்தாவுக்கும் இடையில் மீண்டும் நேரடி விமானச் சேவை

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 19

கொழும்பிற்கும், கொல்கத்தாவுக்கும் இடையில் நேரடி விமானச் சேவையை  மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இந்தியா மற்றும் பங்களாதேஷிற்கான பிராந்திய மேலாளர் வி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்கா ஏர்லைன்ஸ் தகவல்

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறிலங்கா ஏர்லைன்ஸ் 2017இல் இருந்து 2020 வரை, கொழும்பு – கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு இடையில் மூன்று நேரடி விமானங்களை இயக்கியது.எனினும் கோவிட் தொற்று காரணமாக அது நிறுத்தப்பட்டது. பின்னர் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த சேவைகள் தொடர்ச்சியாக இடம்பெறவில்லை.

இதேவேளை இந்தியாவில் உள்ள 11 நகரங்களில் 9 நகரங்களுக்கு ஏற்கனவே இணைப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன்படி கொல்கத்தாவில் இருந்து நேரடி சேவைகளை மீண்டும் தொடங்குவது தங்களின் செயல்திட்டத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply