மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

  • local
  • August 30, 2023
  • No Comment
  • 33

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

உயர் நீதிமன்றத்தினால் மீண்டும் இந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால உள்ளிட்டவர்களுக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி உச்ச நீதிமன்றின் முழுமையான நீதியரசர்கள் அடங்கிய குழாமினால் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.எனினும் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய மீளவும் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நட்டஈடு செலுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய மேலும் 85 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர். இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான்…
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய  விடுமுறை

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையால் வழங்கப்பட்ட B அறிக்கையின் பிரகாரம்…
ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று(09) கூடுகின்றது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க…

Leave a Reply