மர்ம நபரால் வழங்கப்பட்ட ஐஸ் பானம் – சிறுவனுக்கு நேர்ந்த கதி

மர்ம நபரால் வழங்கப்பட்ட ஐஸ் பானம் – சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • local
  • August 25, 2023
  • No Comment
  • 30

ஹொரணை பிரதேசத்தில் பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருந்த சிறுவனுக்கு ஒன்று அடையாளம் தெரியாத நபரால் வழங்கப்பட்ட ஐஸ் பானத்தை அருந்தியதால் சிறுவன் சுகவீனமடைந்துள்ளார்.

பெற்றோர் சிறுவனை ஹொரண வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த சிறுவனுக்கு 12 வயது எனவும் ஹொரண பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவன் வயல்வெளியில் பட்டங்களை பறக்கவிட்டுக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஐஸ் பானத்தை அவருக்கு வழங்கியுள்ளார்.

ஐஸ் பானம்
சிறுவன் அதனை மறுத்த போதிலும் வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பானத்தை குடித்த அவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related post

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர். இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான்…
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய  விடுமுறை

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையால் வழங்கப்பட்ட B அறிக்கையின் பிரகாரம்…
ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று(09) கூடுகின்றது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க…

Leave a Reply