கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது

  • local
  • August 22, 2023
  • No Comment
  • 55

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடைகளுக்குள் 4 கடவுச்சீட்டுகளை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வைத்து கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால்  (21.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் புத்தளம் – கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 48 வயதான வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்
அவர் இன்று அதிகாலை 04.41 மணியளவில் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தடைந்தார்.

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வதற்காக இந்த கடவுச்சீட்டுகளை மனித கடத்தல்காரர்களிடம் ஒப்படைப்பதற்கு குறித்த பெண் திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட பெண், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 04 கடவுச்சீட்டுகளுடன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply