யாழில் பெண் பார்க்க சென்ற இளைஞனை ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் மோசடி!

யாழில் பெண் பார்க்க சென்ற இளைஞனை ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் மோசடி!

  • local
  • August 3, 2023
  • No Comment
  • 129

கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண்ணொருவரை பெண் பார்க்க சென்றுள்ளார்.

இளைஞன் பெண்ணை பார்த்து சென்ற சில நாட்களில் இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

இதில் தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும் தன்னை இப்பெண்ணின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

18 இலட்ச ரூபாய் பணம்

தனது தங்கை வெளிநாட்டு மாப்பிள்ளையை எதிர்பார்ப்பதாகவும் அதனால் உங்களை நான் வெளிநாட்டுக்கு எடுத்து விட முயற்சிப்பதாகவும் கூறி அதற்காக 18 இலட்ச ரூபாய் பணத்தினை இந்த கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறு ஒரு கணக்கிலக்கத்தை வழங்கியுள்ளார்.

இதனால் அவ் இளைஞனும் பணத்தினை வைப்பிலிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்கள் கடந்த நிலையிலும் தனது வெளிநாட்டு அலுவல்கள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் இருந்துள்ளது.

இதனை சுதாகரித்துக்கொண்ட அவ் இளைஞன் அவுஸ்ரேலிய நபருடன் தொடர்பு கொண்டு முரண்பட்ட போது அவர் தொடர்பை துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அந்த தொலைபேசி இலக்கமும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு அதன் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இளைஞன் பணத்தை வைப்பிலிட்ட கணக்கிலக்க உரிமையாளரான கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.

கணக்கு இலக்கத்திற்கு பல தடவைகள் இலட்ச ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.  

.

இடம் பெற்ற விசாரணை

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது இவ்வாறாக வடமராட்சி பகுதியில் உள்ள இளைஞனையும் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது.

அதேவேளை மானிப்பாயில் இளைஞன் பெண் பார்க்க சென்ற அப் பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பளை இளைஞன் தன்னை பெண் பார்த்து சென்ற உடனேயே இளைஞனை பிடிக்கவில்லை என கூறி விட்டதாகவும் அதன் பின்னர் தனது சகோதரன் அவரை ஏமாற்றிய விடயம் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply